
பட்டர்வெர்த், ஜூன் 18 – Seberang Perai Tengah தொழில்துறைப்
பகுதியில் உள்ள ஒரு கிடங்கில், அனுமதியின்றி பல்வேறு வகையான பட்டாசுகள் கொண்ட 9,053 பெட்டிகளை நேற்று வட பொது நடவடிக்கை படைப்பிரிவு பறிமுதல் செய்தது. இந்த பட்டாசுகளின் மொத்த மதிப்பு M8.16 மில்லியன் ரிங்கிட்டாகும். அமலாக்க நடவடிக்கையில், உள்நாட்டு ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு அந்த பட்டாசுப் பொருட்களின் பாதுகாப்பற்ற சேமிப்பைத் தடுப்பதில் தனது குழுவினர் வெற்றி பெற்றதாக பொது நடவடிக்கை வடக்கு படைப்பிரிவு
Komadder ஷாரும் ஹசிம் ( Sharum Hashim ) தெரிவித்தார்.
கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பட்டாசுப் பொருட்களும் தீபகற்பத்தின் வட பகுதியில் விற்பனை செய்வதற்காக சிலாங்கூர், போர்ட் கிளாங்கிலிருந்து கொண்டு வரப்பட்டது என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கண்டறிய 1967 ஆம் ஆண்டின் சுங்கச் சட்டத்தின் பிரிவு 135(1)(d) மற்றும் 1957 ஆம் ஆண்டின் வெடிபொருள் சட்டம் பிரிவு 8 இன் கீழ் மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஷாரும் ஹசிம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.