
ஜியோர்ஜ்டவுன், செப்டம்பர்-18 – பினாங்கு, ஜியோர்ஜ்டவுன், Lebuh Gereja-வில் கார் மீது மரம் விழுந்ததில் சீனப் பிரஜைகளான தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
Pinang Peranakan Mansion கட்டட வளாகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணி வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
சீனாவிலிருந்து வந்த சுற்றுப் பயணிகள் என நம்பப்படும் இருவரும், காரின் இடப்பக்கத்தில் அமர்ந்திருந்தனர்.
காரோட்டுநரும், துணை ஓட்டுநரும் காயமின்றி உயிர் தப்பியதாக, தீமோர் லாவோட் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் Razlan Ab Hamid உறுதிபடுத்தினார்.
கார் மீது விழுந்த மரத்தின் கிளைகளை வெட்டி, இருவரையும் தீயணைப்பு மீட்புத் துறை வெளியில் எடுத்த போது அவர்களிடத்தில் நாடித் துடிப்பு இல்லை.
கனமழை மற்றும் புயல் காற்றால் பினாங்கில் பல இடங்களில் கடந்த சில நாட்களாகவே மரங்கள் வேரோடு சாய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.