Latestமலேசியா

தேசியக் கொடியை இறக்கி சபா-சரவாக் கொடிகளையேற்றி பிரிவினைவாதம் வளர்ப்பதா? வைரல் வீடியோ குறித்து விசாரணையில் இறங்கியப் போலீஸ்

கோலாலம்பூர், செப்டம்பர்-24 – தேசியக் கொடியான Jalur Gemilang இறக்கப்பட்டு, சபா – சரவாக் மாநிலங்களின் கொடிகள் ஏற்றப்பட்ட வீடியோ வைரலாகியிருப்பது குறித்து, போலீஸ் விசாரித்து வருகிறது.

தேசியக் கொடியைச் சிறுமைப்படுத்தும் அச்செயல் தொடர்பில் 1948 தேச நிந்தனைச் சட்டம், 1998 தொடர்பு-பல்லூடக ஆணையச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.

தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் (Tan Sri Razarudin Husain) அதனைத் தெரிவித்தார்.

செப்டம்பர் 16-ஆம் தேதி ஆஸ்திரேலியா, மெல்பர்ன் நகரில் அச்சம்பவம் நிகழ்ந்திருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதது.

அதில், அவ்விரு மாநிலங்கள் மீதான மலேசியாவின் காலனித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதன் அடையாளமாக Jalur Gemilang கொடியை இறக்குவதாகக் கூறிக் கொண்ட கும்பல், சபா-சரவாக் இரண்டையும் குடியரசுகளாக அறிவிப்பதாகவும் கூறிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அச்சம்பவம் தொடர்பில் இதுவரை 35 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

சபாவை முகவரியாகக் கொண்ட நபர் அவ்வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவேற்றியதும் தெரிய வந்துள்ளது.

அவ்வாடவருக்கும், அவ்வீடியோ எடுக்கப்பட்டதற்குமான தொடர்பு தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!