
பெங்களூரு, நவ 8 -பெங்களூரு மாநகர் போக்குவரத்து கழகத்தில், பேருந்து ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுனர் ஒருவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்ததார்.
40 வயதுடைய கீரன் குமார் ( Kiran Kumar ) என்ற அந்த பேருந்து ஓட்டுனர் அன்றைய கடைசி பயணமாக காலை 11 மணியளவில் பேருந்து ஓட்டிச் சென்றபோது இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்தது.
நெலமங்களாவிலிருந்து தசனபுரா பகுதிக்கு பேருந்தை ஓட்டிச்சென்றபோது மாரடைப்பால் குமார் முன்னோக்கி சாய்ந்து இடதுபுறமாக இருக்கையில் சரிந்தை பேருந்திலிருந்த சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மற்றொரு மாநகர் போக்குவரத்து வாகனத்தை மோதியது.
எனினும் தக்க சமயத்தில் பேருந்து கண்டக்டர் ஓட்டுனர் இருக்கையில் பாய்ந்து பேருந்தை பாதுகப்பான இடத்திற்கு ஓட்டிச்சென்று நிறுத்தியதன் மூலம் அனைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தார்.
அதன் பின் அருகேயுள்ள மருத்துவமனைக்கு குமாரை கொண்டுச் சென்றபோதிலும் குமார் இறந்துவிட்டதை அங்குள்ள மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.