
கிள்ளான், பிப்ரவரி-25 – கிள்ளான், கம்போங் புக்கிட் கூடா, ஜாலான் பத்து தீகாவில் மரம் சாய்ந்து காரின் மீது விழுந்ததில், ஒர் ஆடவர் பலியான வேளை, அவரின் 13 வயது மகள் உயிர் தப்பினார்.
நேற்று மாலை 6.30 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
46 வயது Azhehari Ansar ஓட்டுநர் இருக்கையில் சுயநினைவற்ற நிலையில் கிடந்தார்.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு-மீட்புத் துறையினர் காரை வெட்டி அவரை வெளியே மீட்டனர்.
இரவு 7.12 மணி வாக்கில் வெளியே எடுக்கப்பட்ட போது அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
முன்னதாக தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அச்சிறுமியை அங்கிருந்த பொது மக்கள் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர்.
அச்சிறுமிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.