
குவாந்தான், ஏப்ரல் 22 – இல்லாத பங்கு முதலீட்டுத் திட்டத்தில் ஏமாற்றப்பட்ட 36 வயது பொறியியலாளர் 1.16 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்நபர் டிசம்பர் 3 ஆம் திகதி, ஆன்லைனில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டியதாக பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் அவர்கள் தெரிவித்தார்.
‘பூம்ஸ்’ (BOOMS) என்ற முதலீட்டில் அந்தப் பொறியியலாளர் சுமார் 1.16 மில்லியன் தொகையை முதலீடு செய்தார். ஆனால் அந்தப் போலி முதலீட்டு தளத்தின் நிர்வாகிகள், அந்த நபரின் 4 மில்லியன் வருமானத்தைத் திரும்ப கொடுப்பதற்கு நிறைய காரணங்களைக் கூறியதோடு,
பாதிக்கப்பட்டவர் RM15,032 தொகையை மட்டுமே திரும்பப் பெற்றுள்ளார்.
இதனிடையே, இனி பொதுமக்கள் ஆன்லைனில் இத்தகைய மோசடிக்கு ஆளாகாமல் இருக்க மிகுந்த கவனத்துடன் செய்லபட பகாங் காவல்துறைத் தலைவர் வலியுறுத்திள்ளார்