
கோலாலம்பூர், ஏப்ரல்-30, போலீஸ்காரரின் இடது காதைக் கடித்து காயப்படுத்தியதாக, நைஜீரிய ஆடவர் மீது கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை Danierul Azraq Ahmad Khair என்பவரைக் காயப்படுத்தியதாக Okenyehke Kelvin Obianke குற்றச்சாட்டை எதிர்நோக்கினார்.
கெப்போங், மெட்ரோ பிரிமா கிளினிக் முன்புறம் அக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முதலில் குற்றத்தை ஒப்புக் கொள்ள விருப்பம் தெரிவித்தவர், பிறகு அதனை மறுத்தார்.
இதையடுத்து ஜூன் 10-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென அறிவித்த மேஜிஸ்திரேட் எஸ். மகேஸ்வரி, அவ்வாடவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டார்.
அவ்வாடவர் மீது மற்றொரு நீதிமன்றத்தில் மேலுமிரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்தது, போதைப்பொருள் உட்கொண்டது ஆகிய இரு குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.
அந்த வழக்கு ஜூன் 23-ஆம் தேதி செவிமெடுப்புக்கு வருகிறது