Latestமலேசியா

சாவகாசமாக தண்டவாளத்தின் குறுக்கே நடந்த முதியவர்; வைரலான காணொளிக்கு கருத்து குவியல்கள்

கோத்தா பாரு, மே 2- இரயில் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தின் குறுக்கே நடந்து சென்ற முதியவரின் காணொளி வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

KelantanFA.com பக்கத்தில் பகிரப்பட்ட இக்காணொளியில், இரயில் நகரத் தொடங்கியவுடன், முதியவரொருவர் தண்டவாளங்களைக் கடப்பதைக் காண முடிந்தது.

அம்முதியவரின் செயல்கள் இணையதளவாசிகளிடமிருந்து பல்வேறு கருத்துக்களை ஈர்த்துள்ளன. ஒரு தரப்பினர் இச்செயலை ஆபத்தானது என்றும், மற்றும் சிலர் அம்முதியவர் ரயில் நிலையத்திற்கு அருகில் வசித்து வருவதால் தண்டவாளத்தை கடப்பது அவருக்கு பழக்கமான ஒன்றாக இருக்கலாம் என்றும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து, மற்றொரு தரப்பு இச்செயலுக்கு நகைச்சுவை கருத்துக்களைப் பதிவிட்டு வரும் அதே வேளை வேலிகள் அமைக்கப்படாத தண்டவாளங்கள் இருப்பதைக் கண்டு KTMBயின் மீது குற்றம் சாட்டும் இணையவாசிகளும் உள்ளனர்.

இந்நிலையில் KTMBயின் கவனத்தை ஈர்த்த இக்காணொளி, இரயில் பாதைகளைக் கடப்பது அல்லது அத்துமீறி நுழைவது ஆபத்தான செயல் என்றும் இதனை பொதுமக்கள் பின்பற்றக்கூடாது என்றும் அறிவுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!