
புந்தோங், மே 5 – வருகின்ற, மே 10-ஆம் திகதி, புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துள்சி மனோகரன் ஏற்பாட்டில், SPM மற்றும் STPM முடித்த மாணவர்களுக்கான, JOM Masuk IPTA 2025, IPTA விண்ணப்பங்கள் தொடர்பான விளக்க பட்டறையில் ஒன்று நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வு KIA புந்தோங் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், UPU, Politeknik, Kolej Komuniti, ஆசிரியர் பயிற்சிக் கழகம், மற்றும் பல்கலைகழகங்கள் என அனைத்து உயர்கல்விக்கூடங்களோடு PTPTN நிறுவனமும் பங்கு பெறவிருக்கின்றது.
மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களுக்கிருக்கும் கேள்விகள் சந்தேகங்களை நேரடியாக கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
UPU விண்ணப்பங்களுக்கான இறுதி நாள் மே 18ஆம் திகதி. எனவே மாணவர்கள் தங்களின் விண்ணப்பம் துல்லியமாகவும் சரியாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு இந்த அரிய வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள மாணவர்கள் திரையில் கீழ்காணும் இணைப்பில் தங்களைப் பதிவுச் செய்துக்க கொள்ளலாம்.
https://forms.gle/vHHuLVwbqKXq2Bn1A