
டோக்கியோ, ஜூன் 27 – இன்று வடக்கு ஜப்பானின் யமகட்டா விமான நிலையத்தில் அதிகாலையில் கருப்பு கரடி ஒன்று விமானங்கள் மேலேறுவதற்கு ஆயத்தமாகும் ஓடுபாதையில் சுற்றித் திரிந்ததால், அங்கு இன்றைய விமான பயணங்கள் தடையாகியுள்ளன..
விமான நிலைய ஊழியர்கள் அக்கரடியை விரட்டுவதற்கு கார் ஒன்றைப் பயன்படுத்தி ஓடுபாதையை மீண்டும் மூடியபோதும் கரடி அந்த வளாகத்திலிருந்து வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கரடியை பிடிப்பதற்கு விமான நிலைய நிர்வாகம் வேட்டைக்காரர்களை வரவழைத்து பொறி ஒன்றை அமைத்துள்ளனர் என்றும் கரடி தப்பி ஓடாமலிருக்க விமான நிலையத்தைச் சுற்றி காவல்துறை அதிகாரிகளும் இன்று இரவு 8 மணி வரை காவலுக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 2024 ஆம் ஆண்டு வரையிலான 12 மாதங்களில் 219 பேர் கரடியால் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆறு பேர் இறந்துள்ளனர் என்றும் அறியப்படுகின்றது.