Latestமலேசியா

வியட்நாமில் விமான நிலையத்தில் 2 விமானங்கள் ‘உரசல்’; 4 விமானிகள் பணி இடைநீக்கம்

ஹனோய், ஜூன்-30 – ஹனோய் நொய் பாய் அனைத்துலக விமான நிலையத்தில் 2 வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு இடையே ஏற்பட்ட உரசல் காரணமாக, 4 விமானிகள் இடைநீக்கம் செய்யப்பட்டு, 2 விமானங்கள் சேவையிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

விமான ஓடுபாதைக்குள் நுழைவதற்கு முன்பாக அச்சம்பவம் நிகழ்ந்தது.

ஹோ சின் மின் நகருக்குப் பயணமாகவிருந்த விமானத்தின் வலப் பக்க இறக்கையின் நுனிப்பகுதி, பக்கத்திலிருந்த விமானத்தின் வால் பகுதியை மோதி கிழித்தது.

எனினும் 2 விமானங்களிலுமிருந்தசுமார் 400 பயணிகளுக்கும் காயமேதும் ஏற்படவில்லை.

பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டு இரு விமானங்களும் உடனடி தொழில்நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

பாதிக்கப்பட்ட பயணிகள் மாற்று விமானங்களின் மூலமாக இலக்கை நோக்கிப் புறப்பட்டனர்.

சம்பவத்தின் போது வானிலைத் தெளிவாக இருந்துள்ளது; பார்க்கும் தூரமும் நல்ல நிலையிலேயே இருந்துள்ளது.

ஆக எப்படி மோதல் நிகழ்ந்தது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்சிகள் செல்லும் பாதையில் இரு விமானங்களும் ஒன்றோடு ஒன்று மிக அருகில் செல்வதையும் வலைத்தளவாசிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

முழு விசாரணைக்குப் பிறகே உண்மை நிலவரம் தெரிய வரும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!