Latestமலேசியா

பக்தி, கலாச்சாரம் மட்டுமல்ல, கல்விக்கும் அர்த்தமுள்ள ஊக்கமாக விளங்கிய கெளுகோர் நவராத்திரி விழா

கெளுகோர், அக்டோபர்-1,

நாடளாவிய நிலையில் -9,

நாள் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

கோவில்களில் கடவுள் அலங்காரம், பூஜைகள், அன்னதானம், பரதநாட்டியம் நடனங்கள், சன்மார்க்க சொற்பொழிவுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஆனால் செப்டம்பர் 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, பினாங்கு, கெளுகோரில் உள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில், கல்வியாளர் எஸ். பத்மநாதன் இந்த விழாவை மாணவர்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பாக பயன்படுத்தினார்.

அவர் அடுத்தாண்டு முதலாம் படிவம் செல்லும் மாணவர்களுக்கு அறிவியல் கல்குலேட்டர்கள் மற்றும் 5 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எழுத்து உபகரணங்களையும் வழங்கினார்.

வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுக்கான பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு அப்பொருட்களை எடுத்து வழங்கினார்.

டியூஷன் வகுப்புகளை நடத்தி வருபவருமான பத்மநாதன், வரவிருக்கும் SPM தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக மாதிரி கேள்வித் தாள்களையும் இலவசமாக கொடுத்தார்.

“இது குழந்தைகளை வழிநடத்த சிறந்த நேரம். கல்வியே எதிர்கால வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பாதை. அவர்கள் நன்றாகப் படித்தால் சமூகத் தீமைகளில் சிக்காமல் இருப்பார்கள்” என்றார் அவர்.

நவராத்திரி வெறும் பக்தி, கலாசாரம் மட்டுமல்ல, கல்விக்கும் ஓர் அர்த்தமுள்ள ஊக்கமாக மாறியதை இவ்விழா எடுத்துக் காட்டியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!