Latestமலேசியா

EPF பணத்தில் காப்பீட்டு பிரிமியம் தொகையைச் செலுத்துவதா? ஓய்வூதிய சேமிப்பு குறித்து டத்தோ சிவகுமார் கவலை

கோலாலாம்பூர், ஜூன்-24- சுகாதாரக் காப்பீட்டுக்கான பிரீமியம் சந்தா செலுத்த EPF-பின் இரண்டாவது கணக்கைப் பயன்படுத்த அனுமதிக்கும் பரிந்துரையை, அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

DSK எனப்படும் Dinamik Sinar Kasih சமூக நலச் சங்கத்தின் தலைவர் டத்தோ என். சிவகுமார் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

B40 மற்றும் M40 வர்க்கத்தினர் தரமான சுகாதார சேவையை பெற உதவுவதற்கான நல்ல நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட பரிந்துரை என்றாலும், இது சந்தாத்தாரர்களின் ஓய்வுக்கால சேமிப்பில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.

மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களின் ப்ரீமியம் கட்டணம் நிரந்தரமல்ல, அது வயது, உடல்நிலை மற்றும் குடும்பத் தாக்கங்களின் அடிப்படையில் அதிகரிக்கக்கூடும்.

ஒருவேளை முழுக் குடும்பத்திற்கும் காப்பீட்டு பாதுகாப்பு எடுத்தால், அதற்கு EPF சேமிப்பை பயன்படுத்தும் போது, ஓய்வுக்கால பாதுகாப்பு பாதிக்கப்படும்.

எனவே, அரசாங்கம், தனி காப்பீட்டுக்கு பதிலாக, குறைந்த கட்டணத்தில் அனைத்து மக்களுக்கும் சுகாதாரம் வழங்கும் பொது காப்பீட்டு திட்டங்களை உருவாக்க வேண்டும்.

மலேசியா ஏற்கனவே மலிவான மற்றும் ஆக்கப்பூர்வமான பொது சுகாதார வசதிகளை வழங்கி வருகிறது; எனவே, தனியார் காப்பீடு கட்டாயமல்ல என்றார் அவர்.

இது தவிர, EPF i-Akaun செயலியில் விவேக தணிக்கை முறையை கொண்டு வரவும் டத்தோ சிவகுமார் பரிந்துரைத்தார்; இதன்மூலம், ஏதேனும் காப்பீட்டுக்காக பணம் திரும்பப் பெறும் முன், அதன் தாக்கம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

எது எப்படி இருப்பினும், மக்களின் ஓய்வுக்கால நிதி பாதுகாப்பை உறுதிச் செய்வதே முக்கியம்.

சுகாதார அணுகலை மேம்படுத்த வேண்டும், ஆனால் அதற்காக சேமிப்பை பலியாக்கக் கூடாது என டத்தோ சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!