
புத்தாக்கத்தை மையமாக கொண்டு உலகம் சென்று கொண்டிருக்கும் நிலையில் அதற்கு ஏற்ப பட்டதாரிகளை உருவாக்குவது அவசியம். அந்த அடிப்படையில் தனது மாணவர்கள் படிப்புக்கு பிந்திய நிஜ வேலையிட வாழ்க்கையிலும் வெற்றிப் பெற்றவர்களாக திகழ தயார்ப்படுத்தும் நோக்கில் Innovation and Incubation Hub -புத்தாக்க வளர்ப்பு மையத்தை AIMST தொடக்கியுள்ளத்து.
கடந்த சனிக்கிழமை நடந்த 16 வது AIMST பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியபோது அதன் வேந்தர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவிதுள்ளார்.
பல்துறைகளில் 829 மாணவர்கள் பட்டம் பெற்ற நிலையில் அவர்களுடைய பெற்றோர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்தனர்.
வேலைச் சந்தையின் தேவையறிந்து மாணவர்களுக்கான படத்திட்டத்தையும் போதனா வசதிகளையும் தொடர்ந்து AIMST மேம்படுத்தி வருகிறது. 5.8 மில்லியன் ரிங்கிட் செலவில் பல்கலைக்கழக பாதுகப்புக்கு வளாகம் சுற்றிலும் CCTV காமிரா மற்றும் 4.7 மில்லியன் ரிங்கிட் செலவில் அறிவியல் கூட தரமுயர்த்தும் வேலகைளுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளன. இவ்வேளயில் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் 25மில்லியன் ரிங்கிட் வருடாந்திர ஒதுக்கீட்டிற்கும் அவர் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஜிமிற்கு நன்றியும் தெரிவித்து கொண்டார்.
அதே சமயத்தில் மாணவர் தேவையறிந்தும் கோலாலம்பூரில் புதிய கல்லூரி வளாகத்தை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் வெளிநாடுகளில் அது போன்று வளாகத்தை திறக்க ஆராய்ந்து வருவதாக விக்னேஸ்வரன் கூறினார்.
அதே சம்யத்தில் பெற்றோர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் AIMST-டில் படிக்கும் 726 மாணவர்களுக்கு MIED மூலம் அண்மையில் 18மில்லியன் ரிங்கிட்டிலான உபகராச்சம்பளம் சம்பளம் வழங்கப்பட்டத்கையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தனை வசதிகள் ஏற்படுத்தி தந்த்துள்ள AIMST பல்கலைக்கழகத்தின் கல்வி வாய்ப்புகளை மேலும் அதிகமான இந்திய மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் எதிர்ப்பார்ப்பையும் விக்னேஸ்வரன் வெளிப்படுத்தினார்.