
கோலாலம்பூர் – ஜூன் 8 – மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களுக்கு சரணாலயமாக விளங்கிய பெட்டாலிங் ஜெயாவில் செயல்பட்ட பி.பி.என் மாணவர் விடுதி பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு மேற்படிப்புக்கான புகலிடமாக விளங்கிய கோலாலம்பூரில் எங்கிருந்தோ வரும் மாணவர்கள் மத்தியில் அது பிரபலம்.
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த டாக்டர் பி.பி நாரயணன் மற்றும் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் ஆதரவோடு நிர்மாணிக்கப்பட்ட பி.பி.என் மாணவர் விடுதி 1965ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம்தேதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.
அன்றைய காலக்கட்டத்தில் மலாயா பல்கலைக்கழகம் மற்றும் கோலாலம்பூர் சுற்று வட்டாரத்தில் உயர்க் கல்வி பயின்ற பெரும்பாலான தோட்டப்புற வெளியூர்களைச் சேர்ந்த வசதி குறைந்த மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு வசதியாக பி.பி.என் மாணவர் விடுதி அமைந்திருந்தது.
இதனிடையே, அந்த தங்கும் விடுதி ஆற்றிய பங்களிப்பை நினைக்கூறும் வகையில்
Legacy of PP Narayanan Student’s Hostel என்ற ஆங்கில நூல் அண்மையில் தலைநகரில் வெளியீடு கண்டது.
மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும் அந்த விடுதியில் தங்கியிருந்து தனது கல்வியை முடித்தவர்களில் ஒருவருமான ரவிந்திரன் ராகவன் இந்த நூலை எழுதிய நிலையில் டத்தோ டாக்டர் அகமுத்து, மலாயா பல்லைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் Tan Sri டாக்டர் மாரிமுத்து ஆகியோர் இணைந்து இதனை வெளியீடு செய்தனர்.
இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியின் போது S.V முத்து, பலு K, ரவி ரத்னம் , டத்தோ ராஜதுரை, Gopalan, Thomas Mathew, ராமன் சின்னப்ப நாயுடு மற்றும் நூலாசிரியர் ரவிந்திரன் ராகவன்
ஆகியோர் 1960, 1980 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் தாங்கள் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது பி.பி.என் தங்கும் விடுதியில் தங்கியிருந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தனது நினைவலைகளையும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் பேராசிரியர் அகமுத்து. இந்த நிகழ்ச்சியில் 1960 முதல் 1990 ஆம் ஆண்டுவரை தங்களது உயர்க்கல்வியை பயின்றபோது பி.பி.என் தங்கும் விடுதியில் தங்கியிருந்த முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டதோடு அவர்கள் அனைவருக்கும் இப்புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.