
புத்ராஜெயா: மாஜு எக்ஸ்பிரஸ்வே (MEX II) நீட்டிப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ‘சுகுக்’ நிதியில் சுமார் RM11 மில்லியன் டிஜிட்டல் நாணய (Cryptocurrency) வடிவத்தில் செலவிடப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (MACC) தலைவர் அசாம் பாக்கி கூறியுள்ளார்.
MEX II திட்டத்திற்கு செலவிடப்படாமல், டிஜிட்டல் நாணய வடிவில் 9 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டதைக் கண்டறிந்த ஊழல் எதிர்ப்பு ஆணையம் பணம் எவ்வாறு திரும்பப் பெறப்பட்டது மற்றும் அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதையும் கூடிய விரைவில் கண்டறியுமென்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் விசாரணையின் ஒரு பகுதியாக MACC 55 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களை எடுத்துள்ளதாகவும், மொத்தம் 156 மில்லியன் ரிங்கிட்டைப் மதிப்புள்ள 14 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாகவும் அசாம் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் சுகுக் நிதி, ‘டான் ஸ்ரீ’ என்ற பட்டப்பெயரில் உள்ள ஒரு நிறுவனத்திற்குச் சென்றுள்ளதாகவும் டான் ஸ்ரீயின் மனைவியின் தனிப்பட்ட கணக்கு உட்பட பல நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த விசாரணையில். MACC ஒரு சொகுசு காண்டோமினியம் மற்றும் 24.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஒரு நிலத்தையும், 7.6 மில்லியன் மதிப்புள்ள ஒன்பது வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.