Latestமலேசியா

‘RON95’-இன் மானியத் திட்டம் தொடரும்

கோலாலம்பூர் ஜூன் 17 – ‘RON95’இன் மானியத் திட்டத்தைத் தொடர்வதில் எவ்வித மாற்றமுமில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்

RON95 தொடர்பாக பல எதிர்மறை பிரச்சாரங்களும் கருத்து கணிப்புகளும் தொடர்ந்து நடந்து வந்தாலும் இவ்வாண்டின் இரண்டாம் பாதியிலிருந்து திட்டமிட்டபடி RON95 மானியத்தை அரசாங்கம் செயல்படுத்தும் என்று நிதி அமைச்சர், டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் விளக்கியுள்ளார்.

கூடுதலாக, மானியங்களை பகுத்தறிவு செய்வது தொடர்பான விவாதங்கள் அமைச்சரவையில் இன்னும் நடந்து வருவதாகவும், அதற்கான சிறந்த வழிமுறையை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும் ஏழைகளுக்கு உதவுவதற்கும், கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதாரம் உட்பட சிறந்த பொது சேவைகளை வழங்குவதற்கும் போதுமான வளங்களை நமது நாடு கொண்டிருக்க வேண்டுமென்று எரிசக்தி ஆசியா 2025 சந்திப்பு கூட்டத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!