
கோலாலம்பூர், ஜூன் 26 – அரசாங்கம் இவ்வாண்டு RON95 பெட்ரோல் மானியத்தை பொருத்தமான வழிமுறைகளைக் கொண்டு மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாதவாறு கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படுமென்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
அரசாங்கம் RON95இன் இலக்கு அமைப்பை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றதென்றும் அது முழுமையாக முடிந்ததும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இம்மானியம் தொடர்பாக பல எதிர்மறை பிரச்சாரங்களும் கருத்து கணிப்புகளும் எழுந்த வருகின்ற போதும், மக்களுக்கு பளு ஏற்படுத்தாத வகையில் RON95 நிச்சயம் அமலுக்கு கொண்டு வரப்படுமென்று பிரதமர் உறுதி பூண்டுள்ளார்.