Latestமலேசியா

ஈப்போவில் அழுகிய நிலையில் மாதுவின் சடலம் வீட்டில் கண்டெடுப்பு; அண்ணன் மகன் கைது

ஈப்போ, நவம்பர்-11 – அண்ணன் மகனால் கொலைச் செய்யப்பட்டதாக நம்பப்படும் மாதுவின் அழுகிய சடலம் ஈப்போ, தாமான் புத்ரி லிண்டோங்கான் பிந்தாங்கில் உள்ள ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.

கடுமையான நுர்நாற்றம் வீசியதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த 54 வயது உள்ளூர் மாதுவின் உடல் மீட்கப்பட்டது.

உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீசார், 21 வயது இளைஞனை கைதுச் செய்தனர்.

அவன் போதைப்பொருள் எதுவும் உட்கொண்டிருக்கவில்லை என்பதோடு, குற்றப் பதிவுகளையும் கொண்டிருக்கவில்லை.

கொலைக் குற்ற விசாரணைக்காக அந்நபர் திங்கட்கிழமை முதல் தடுத்து வைக்கப்படவிருப்பதாக ஈப்போ போலீஸ் தலைவர் Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!