Latestமலேசியா

2.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போலி வர்த்தக முத்திரைப் பொருட்கள் பறிமுதல்

ஜோகூர் பாரு, ஜூன்-20 – ஆடம்பர வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்தி விற்பனைக்கு வைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான போலி பொருட்கள் ஜோகூர் பாருவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உலு திராம் Taman Austin மற்றும் Taman Gaya-வில் 2 வணிகத் தலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அவை சிக்கின.

Louis Vuitton, Gucci, Chanel, Hermes, Dior ஆகிய ஆடம்பர முத்திரைகளைக் கொண்ட போலி கைப்பைகள், Miu Miu, Balenciaga, Fendi, Hermes ஆகிய முத்திரைகள் ஒட்டப்பட்ட போலி காலணிகளும் அவற்றிலடங்கும்.

இது தவிர, போலி கை கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டன.

அவற்றின் மொத்த மதிப்பு 2.5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் என, தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறினார்.

சுங்கத் துறையிடம் அறிவிக்கப்படாமல் நாட்டுக்குள் அவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அந்த Op Paten 1 சோதனையில், அவ்வணிகத் தலங்களின் உரிமையாளர் மற்றும் பாதுகாவலர் என நம்பப்படும் ஒரு வியட்நாமியப் பெண் உட்பட நால்வர் கைதாகினர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!