
புதுடில்லி , ஏப் 29 – சர்ச்சைக்குரிய காஷ்மீரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் துருப்புக்களிடையே தொடர்ந்து ஐந்தாவது இரவும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்தது என்று புதுடில்லி ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. காஷ்மீர் வந்த சுற்றுப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்திய மற்றும் பாகிஸ்தான் உறவுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
போட்டி நிறைந்த காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில், இந்திய ராணுவ வீரர்களும் பாகிஸ்தான் படைகளும் இரவு முழுவதும் ஒருவருக்கொருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 22 அன்று இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அணு ஆயுதம் கொண்ட அந்த இரு அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.
26 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான அந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவான தீவிரவாதிகள் நடத்தியதாக இந்தியா கூறியிருந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. அதன் பின்னர் இரு நாடுகளும் காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு, அரச தந்திர வாதங்கள், குடிமக்களை வெளியேற்றுதல் மற்றும் எல்லையை மூட உத்தரவிட்டுள்ளன.
நேற்று இரவு முதல் இன்று வரை, பாகிஸ்தான் இராணுவம் கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே குப்வாரா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களுக்கு எதிரே உள்ள பகுதிகளிலும், அக்னூர் என்ற இடத்திலும் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்பட்டது. தனது துருப்புக்கள் பயனுள்ள முறையில் பதிலடி கொடுத்தாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தானிடமிருந்து எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. பாகிஸ்தான் குடிமக்கள் வெளியேற இன்று கடைசி நாள் என்று இந்தியா தெரிவித்துள்ளது.