இந்தியா, ஜன 12 – உலகத் தமிழ் வர்த்தக சங்கமும், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பும் இணைந்து ’10 ஆம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு நிறைவு விழாவை’, ஜனவரி 7ஆம் தேதி தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம். சரவணன் மற்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர்.வி. ராதா கிருஷ்ணன் ஆகியோர் தொடக்கி வைத்துள்ளனர்.
பல்வேறு நாட்டின் தொழில் வாய்ப்புகள் குறித்தும், அரசங்கத்தின் மானியங்களையும், குறுந்தொழிலில் கடன் பெரும் வசதிகள் பற்றியும் வங்கி அதிகாரிகள் பொதுமக்களுக்கு இந்நிகழ்வின் வழி தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் பல்வேறு நாட்டு தூதர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொழில் வல்லுநர்கள் ஆகியோர் கலந்துள்ளனர். மேலும், இந்த நிறைவு விழாவில் சிறு மற்றும் குறுந்தொழில் அதிபர்களும், பெண் தொழில் முனைவோர்களும், எம்.பி.ஏ மாணவர்களும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களும் கலந்து பயனடைந்துள்ளனர்.