கோலாலம்பூர், மார்ச் 13 – தலைநகர், கம்போங் பண்டான், கம்போங் இந்தியா செட்டில்மென்ட்டிலுள்ள, 15 வீடுகள் தீக்கிரையாகின.
நேற்றிரவு மணி 9.51 வாக்கில் அந்த தீ விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்ததை, கோலாலம்பூர் தீயணைப்பு மீட்பு துறையின் நடவடிக்கை பிரிவு காமண்டோ முஸ்தபா கமால் முஹமட் அரே உறுதிப்படுத்தினார்.
ஒன்பது தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த 48 தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், நள்ளிரவு மணி 12.30 வாக்கில் தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அந்த தீ விபத்தில், உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.