திருவனந்தபுரம், நவ 15 – கேரள மாநிலத்தில் வளநாட்டில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த சிறுத்தைப் புலி ஒன்று தானாக வந்து கோழிக்கூண்டுக்குள் சிக்கியது. விவசாயி ஒருவரின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோழிக் கூண்டுக்குள் இருந்த கோழிகள் அனைத்தும் இரவு நேரத்தில் இறக்கைகளை அடித்து பயத்தில் சத்தம் போட்டதை தொடர்ந்து வீட்டின் உரிமையாளரான ஹம்சாவும் அவரது அண்டை வீட்டுக்காரர்களும் வெளியே வந்து பார்த்தனர். அப்போது சிறுத்தைப் புலி ஒன்று கோழிக்கூண்டுக்குள் படுத்துக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த சிறுத்தை மிகவும் பலவீனமாக காணபப்பட்டது, சிறுத்தையால் எழுந்திருக்வும், சத்தமிடவும் முடியாமல் மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து அவர்கள் அந்த சிறுத்தையை பிடித்துக் சென்றனர். பொதுவாக சிறுத்தைகள் கோழிகளை வேட்டையாடி உண்பதில்லை. ஆனால் இந்த சிறுத்தை பல நாட்களாக பட்டினியால் இருந்தால் வேறு வழியின்றி கோழிகளை வேட்டையாட முயன்று கூண்டுக்குள் சிக்கிவிட்டது என வயநாடு வன அதிகாரி ஷஜ்னா தெரிவித்தார்.