Latestமலேசியா

இருதய நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி ஹர்சீத்தாவுக்கு பிரதமர் அன்வார் நிதியுதவி

கோலாலம்பூர், மார்ச் 20 – சிலாங்கூர் , பத்துமலையைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஹர்சீத்தா சாய் செல்வ கணபதி ( Harsheeta Sai ) பிறந்தது முதல் இருதய நோய்க்கு உள்ளாகியுள்ளார்.

சுங்கை பூலோ, சரஸ்வதி தமிழ்ப் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவியான ஹர்சீத்தாவிற்கு பிறந்தது முதல் ஆக்சிஜன் அளவு 70 விழுக்காடு முதல் 75விழுக்காடு மட்டுமே செயல்பட்டு வருகிறது.

எனவே அச்சிறுமிக்கு அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவமனையான பாஸ்டன் (Boston) மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என தேசிய இருதய சிகிசை நிலையமான IJN பரிந்துரை செய்துள்ளது.

அங்கு சிசிக்சை மேற்கொள்வதற்கு மருத்துவ செலவு 350,000 அமெரிக்க டாலர்களை எட்டும் என தெரிவிக்கப்பட்டதால் அந்த தொகையை திரட்டுவது அவரது குடும்பத்திற்கு பெரும் சவாலாக மாறியதால்
பொதுமக்களின் உதவி நாடப்பட்டது.

இதனிடையே, இந்த விவகாரம் பிரதமர் அன்வாருக்கு தெரிய வரவே, உடனே சிறுமி ஹர்சீத்தா சாய்க்கு உதவ பணித்துள்ளார் அவர்.

அதனைத் தொடர்ந்து, இன்று பிரதமரின் அரசியல் செயலாளர் பர்ஹான் பவ்சி (Farhan Fauzi) சிறுமி ஹர்சீத்தா சாயின் இல்லத்திற்கு வருகை புரிந்து அச்சிறுமியை நலம் விசாரித்ததோடு பிரதமர் சார்பில் நிதியுதவிக்கான காசோலையை அவரது தந்தை செல்வ கணபதியிடம் வழங்கினார்.

பாதிக்கப்பட் சிறுமியின் குடும்பத்தின் நிதி திரட்டும் முயற்சிகளுக்கு உதவும் மற்றும் அவர்களின் சுமையை குறைக்கும் வகையில் பிரதமரின் இந்த நிதியுதவி அமையும் என பர்ஹான் பவ்சி இன்று தனது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

அதோடு ஹர்சீத்தா வெளிநாட்டில் சிகிக்சை பெற்று பூரண குணமடைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நல்லமனதோடு ஹர்சித்தாவின் மருத்துவ செலவிற்கு மேலும் உதவ விரும்புவோர் தாராளமாக தொடர்ந்து உதவுமாறும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!