ஷா ஆலம், பிப் 2: இம்மாதம் தொடங்கி சிலாங்கூர் மருத்துவப் பரிசோதனை திட்டத்தில், மேமோகிராம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனையை, மாநில மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் LPPKN வழங்குகிறது.
இந்த இரண்டு சேவைகளுக்கும் மொத்தம் 6,500 இலவச ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என அதன் துணைத் தலைவர் ஜுவைரியா சுல்கிஃப்லி கூறினார்.
மாநில மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியமானது, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் நலனுக்காகவும் முன்னிலைப் படுத்தப்பட வேண்டிய பல்வேறு விரிவான கொள்கைகள் மற்றும் திட்டங்களையும் கொண்டுள்ளது.
“அதன் அடிப்படையில், நாங்கள் எங்கள் கொள்கைகளையும் திட்டங்களையும் பிரபலப்படுத்த வேண்டும். இதன் மூலம் பெண்கள், குறிப்பாக மலேசியாவில் உள்ள குடும்பங்கள் தெரிந்து கொள்ளவும், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.” என்று அவர் கூறினார்.