கோலாலம்பூர், மார்ச் 11 – 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் அமைப்பாளராக இருந்த விக்டோரியா விலகித் கொண்டுள்ளதை அடுத்து, அந்த வாய்ப்பு மலேசியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதற்காக, 60 கோடியே 20 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டையும், CGF – காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஆகக் கடைசியாக, 1998-ஆம் ஆண்டு, மலேசியா காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தியது.
அதனை தொடர்ந்து, இப்பொழுது தான் மீண்டும் மலேசியாவுக்கு அந்த அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
கடந்த மாதம், மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் மற்றும் மலேசிய காமன்வெல்த் விளையாட்டு சங்கத்திற்கு, அது தொடர்பில் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்திருந்ததை அடுத்து, இளைஞர், விளையாட்டு அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
உலக விளையாட்டு வரைபடத்தில் மீண்டும் மலேசியாவை கால்பதிக்க உந்துதலாக இருக்க போது அந்த “ஒருமுறை வாழ்நாள்” சலுகையை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டுமென, மலேசிய காமன்வெல்த் விளையாட்டு சங்கத்தின் தலைவர் டான் ஸ்ரீ நோர்ஸா ஜாகாரியா கேட்டுக் கொண்டுள்ளார்
தற்போதுள்ள உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன், 72 காமன்வெல்த் நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்த மலேசியா தயாராக உள்ளதாகவும் நோர்ஸா ஜாகாரியா கூறியுள்ளார்.