கோலாலம்பூர், டிச 23 – கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஆரம்பமாகிவுள்ளது.
இன்று காலை 9:30 மணியளவில், சுங்கை பூலோவிலிருந்து புக்கிட் பெருந்தோங் நோக்கி வடக்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வாகனங்கள் மெதுவாகச் செல்வதாக மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் LLM தெரிவித்திருந்தது.
புக்கிட் தாகாரில் இருந்து புக்கிட் பெருந்தோங்கிற்கு செல்லும் வழியில் தெற்கு நோக்கி KM 426.5 இல் ஒரு விபத்தினால், இரு திசைகளிலும் வலது பாதை இன்னும் மூடப்பட்டுள்ளது என்று PLUS அதன் அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவு செய்திருந்தது.
அதேபோல், KM182.2 இல் ஜசினிலிருந்து அயர் கெரோஹ் வரை வடக்கு நோக்கிச் செல்லும் வலது பக்கப்பாதை தடுக்கப்பட்டு நான்கு கிலோமீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு ஒரு விபத்து காரணமாகும்.
இதற்கிடையில், வாகனங்களின் அதிகரிப்பு காரணமாக கோம்பாக்கிலிருந்து கெந்திங் செம்பா வரை கிழக்கே கோம்பாக் டோல் பிளாசாவிற்கு முன்பு போக்குவரத்து மெதுவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.