Latestஇந்தியா

அயோத்திக்கு பட்டாசுகளை ஏற்றிச் சென்ற லோரி தீப்பிடித்தது; பட்டாசுகள் வெடித்து சிதறின

உத்திர பிரசேதம், ஜனவரி 17 – இந்தியா, தமிழ்நாட்டிலிருந்து, அயோத்திக்கு பட்டாசுகளை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

நேற்று நள்ளிரவு, அயோத்தியை நோக்கி பயணமான அந்த டிரக், உன்னாவோவிலுள்ள, பூர்வா கோட்வாலி, கார்கி கேடா கிராமத்தில் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

டிரக் தீயில் கொழுந்து விட்டு எரிவதையும், அதிலிருந்து பட்டாசுகள் வெடித்து சிதறும் காட்சிகளும் அடங்கிய காணொளி ஒன்றை உள்ளூர் வாசிகள் பதிவுச் செய்து வெளியிட்டுள்ளனர்.

சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னரே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இம்மாதம் 22-ஆம் தேதி, அயோத்தி இராமர் கோவிலில் நடைபெறவிருக்கும் மஹா கும்பாபிஷேக விழாவிற்காக அந்த பட்டாசுகள் நிரப்பப்பட்ட டிரக் அயோத்திக்கு பயணமானதாக நம்பப்படுகிறது.

எனினும், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

அந்த தீ விபத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீக்கான காரணமும் தெரியவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!