
கசான், மே-15- ஷ்யாவுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு, இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
மாஸ்கோ மாநில அனைத்துலக உறவுகள் அகாடமியான MGIMO-வில் அவர் பொது சொற்பொழிவு ஆற்றுகிறார்.
அதன் போது, அனைத்துலக அளவில் ஆற்றிய பங்களிப்பையும் அவரின் தலைமைத்துவ ஆற்றலையும் அங்கீகரிக்கும் வண்ணம் அந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
தனது 4 நாள் பயணத்தில் தலைநகர் மோஸ்கோவில் அவர் பங்கேற்கும் கடைசி நிகழ்வு இதுவாகும்.
அங்கிருந்து அவர் ரஷ்யாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கசான் நகருக்குச் செல்கிறார்.
ஹலால் பொருளாதாரம் தொடர்பான உயர்மட்ட கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
ஹலால் சான்றிதழ், விவசாயத் தொழில்நுட்படம், இஸ்லாமிய நிதியியல் மற்றும் கல்வி தொடர்பான கலந்துரையாடல்களிலும் டத்தோ ஸ்ரீ அன்வார் கலந்துகொள்கிறார்.