
செப்பாங், ஜூன்-25 – KLIA 2 வழியாக Burung Sewah எனப்படும் 4 ஆசியக் குயில் பறவைகளைக் கடத்திச் செல்ல முயன்ற இந்தோனேசிய ஆடவர் நேற்று முந்தினம் கைதானார்.
விமான நிலைய அதிகாரிகளின் சோதனையின் போது ஒரு அட்டைப் பெட்டி சிக்கியதில், சுராபாயாவுக்குப் பயணமாகவிருந்த அவ்வாடவர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
பெட்டியினுள் பிளாஸ்டிக் குழாய்களில் அப்பறவைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
அப்பறவைகள் 2010 விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டவையாகும். 52,000 ரிங்கிட் மதிப்பிலான அப்பறவைகள் பின்னர் பறிமுதல் செய்யப்பட்டன.