
கோலாலம்பூர், மே 26 – நேற்று, தாமான் இன்டன் பைடூரியில் (Taman Intan Baiduri) நண்பருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாதுகாவலர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார் என்று செந்தூல் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஹ்மத் சுகர்னோ முகமட் ஜஹாரி (Ahmad Sukarno Mohd Zahari) தெரிவித்துள்ளார்.
வாக்குவாதத்திற்குப் பிறகு, சந்தேக நபர், சம்பவ இடத்தை விட்டு வெளியேறி சிறிது நேரத்தில், திரும்பி வந்து பாதிக்கப்பட்டவரை கத்தியால் தாக்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மூன்று நிமிடங்களுக்குள் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோதும், 44 வயதான அந்நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இறந்த அந்த பாதுகாவலரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதுடன், சந்தேக நபரை தேடும் பணியைக் காவல் துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.