
அலோர் காஜா, ஏப்ரல்-27- மலாக்காவில் சாலை சமிக்கை விளக்குப் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளை பிக்கப் லாரி மோதித் தள்ளியதில், 53 வயது மாது உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளோட்டியான 57 வயது அவரின் கணவர் படுகாயமடைந்தார்.
சம்பவத்தின் போது டுரியான் துங்காலிலிருக்கும் வீட்டிலிருந்து பாலாய் பாஞ்சாங்கில் உள்ள உணவகத்துக்கு Honda Wave 125 மோட்டார் சைக்கிளில் அவர்கள் சென்றுகொண்டிருந்தனர்.
இரவு 11 மணியளவில் சாலை சமிக்கை விளக்குப் பகுதியில் அவர்கள் நின்ற போது, மாலிமிலிருந்து பாச்சாங் சென்றுகொண்டிருந்த Mitsubishi Triton வாகனம் பின்னால் மோதித் தள்ளியது.
அதில் ரோஸ்லீனா சினான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்;
கணவர் ஹிஷாம் ஓமார் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மலாக்கா தெங்கா போலீஸ் தலைவர் கிறிஸ்டபர் பத்திட் கூறினார்.
அந்த பிக்கப் லாரி ஓட்டுநருக்குக் காயமேதும் ஏற்படவில்லை; அவர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடினார்.
பின்னர், 13 மணி நேரங்கள் கழித்து போலீஸிடம் சரணடடைய வந்த போது அவ்வாடவர் கைதானார்.
இன்று முதல் அவர் விசாரணைக்குத் தடுத்து வைக்கப்படுகிறார்.