
கோலாலம்பூர், மே 14- ஏயோன் புக்கிட் ராஜா கிளாங்கில், ‘கலர்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின், ‘லெக்ஷ்மிதா வோக் பூட்டிக்’ (Lekshmitha Vogue Boutique) புதிய விற்பனை நிலையம் மிக பிரமாண்டமாக திறப்பு விழாக் கண்டது.
திருமணம் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்வுகளுக்கான பல்வேறு வகையான புடவைகள், மணப்பெண்களுக்கான உபகரணங்கள் , ஆண்களின் திருமண வேஷ்டி சட்டைகள், பிரமாண்ட குர்தி வகைகள், பெண்களுக்கான பலவகையான லெங்கா உடைகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற உடைகளும் கிடைக்கும் வண்ணம் ஏராளமான தேர்வுகள் இங்கு வாடிக்கையாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
லெக்ஷ்மிதா வோக் பூட்டிக்கின் பிரமாண்ட திறப்பு விழாவின் சிறப்பு விருந்தினர்களான ராகா உதயா மற்றும் சம்பா ராக் மன்னர் டார்க்கி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள், லெக்ஷ்மிதா வோக் பூட்டிக்கின் கொலெக்ஷன்கலைப் பார்த்து பிரமித்துப் போயினர்.
இந்த பிரமாண்ட திறப்பு விழாவை முன்னிட்டு குறைந்தபட்சம் 200 ரிங்கிட்டுக்கு பொருட்கள் வாங்குவோருக்கு 100 ரிங்கிட் பெருமானமுள்ள அழகிய புடவை பரிசாக வழங்குகிறது கலர்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம்.
இப்படி இன்னும் ஏராளமான சலுகைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.
ஏயியோன் புக்கிட் ராஜா, கீழ்தளத்தில் அமைந்துள்ள இந்த புட்டிக்கிற்கு குடும்பத்தினரோடு வந்து உங்களின் தேவைக்கேற்ப பிடித்தததை வாங்கிச் செல்லுங்கள்.