கோலாலம்பூர், டிசம்பர் 18 – சீராய்வு மனுவை தாக்கல் செய்வதா அல்லது வேறு ஏதேனும் முறையை கையாளலாமா என்பது குறித்து, இன்ஸ்பெக்டர் ஷீலா என அழைக்கப்படும் 35 வயது ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமாரை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் எம். மனோகரன் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் ஷீலாவுக்கு எதிரான வழக்குகள் தொடர்பான சில ஆவணங்களை அரசாங்க தரப்பு வழக்கறிஞர்களிடமிருந்து இன்று பெற்றதாக கூறிய மனோகரன், மேலும் சில ஆவணங்கள், அடுத்தாண்டு ஜனவரி 15-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு பின்னர் கிடைக்கும் என்றார்.
இன்ஸ்பெக்டர் ஷீலாவுக்கு எதிரான வழக்குகள் அற்பமானது, அடிப்படையற்றது. எனினும், ஆவணங்கள் இன்னும் முழுமையாக கிடைக்காததால், சீராய்வு மனுவை தாக்கல் செய்வதா இல்லையா என்பது குறித்து தமது தரப்பு ஆராய்ந்து வருவதாக மனோகரன் குறிப்பிட்டார்.
இன்ஸ்பெக்டர் ஷீலாவுக்கு எதிராக, செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூன்று கிரிமினஸ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள வேளை ; அடுத்தாண்டு பிப்ரவரி ஐந்தாம் தேதி தொடங்கி ஏழாம் தேதி வரையில் வழக்கு விசாரணை நடைபெறும்.
69 வயது பெண்ணை மிரட்டியதாக அவர் முதல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள வேளை ; குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஈராண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
அதே சமயம், 41 வயது ஆடவர் ஒருவரை சிறுமைப்படுத்தியது, சக பணியாளர் ஒருவரை அவமதித்தது என மேலும் ஒரு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஐந்தாண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே அவர் அனுபவிக்க நேரிடலாம்.