Latestமலேசியா

சபாவில் கைப்பேசி charge-ரால் கல்லூரி மாணவர்களுக்கு இடையில் மோதல்; 17 வயது மரணம்

லாஹாட் டத்து, மார்ச் 23 – சபாவில், கைப்பேசி charger தொடர்பில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம், 17 வயது பையனின் மரணத்தில் முடிந்திருக்கிறது.

லாஹாட் டத்துவில் தொழில் பயிற்சிக் கல்லூரியின் தங்கும் விடுதியில் அச்சம்பம் நிகழ்ந்தது.

Muhd Nazmie Aizat Muhd Narul Azwan எனும் அம்மாணவன், வெள்ளிக்கிழமை காலை 6.50 மணியளவில் மூச்சுப் பேச்சின்றி தங்கும் விடுதி அறையின் தரையில் கிடந்ததை வார்டன் கண்டு தகவல் கொடுத்திருக்கிறார்.

இறந்தவரின் உடலில் பல்வேறு காயத் தளும்புகளும் வீக்கமும் இருந்ததுக் கண்டறியப்பட்டதாக, லாஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவர் ACP ரோஹான் ஷா அஹ்மாட் தெரிவித்தார்.

அம்மாணவன் உயிரிழந்ததற்கான உண்மைக் காரணைத்தைக் கண்டறிய ஏதுவாக அவனது உடல் சவப்பரிசோதனைக்காக லாஹாட் டத்து மருத்துவமனையின் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து 16 முதல் 19 வயது வரையிலான 13 மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, கொலைக்குக் மூலக் காரணமாக இருந்ததாக கூறப்படும் விவேகக் கைப்பேசியின் charger-ரும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைக்கு உதவலாம் என நம்பப்படும் 7 சுயேட்சை சாட்சிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!