
கோத்தா பாரு, ஜூன்-4 – கிளந்தானில் குற்றச்செயல் குறியீடு முந்தையை ஆண்டை விட கடந்தாண்டு 15.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை மொத்தமாக 2,296 சம்பங்கள் பதிவானதாக, மாநில போலீஸ் தலைவர் டத்தோ மொஹமட் யூசோஃப் மாமாட் கூறினார்.
அவற்றில் கடும் குற்றங்களில் ஒன்றான கற்பழிப்பு 20.7 விழுக்காடு அதிகரித்து 157 சம்பவங்கள் பதிவாகின.
அடித்து காயம் விளைவிக்கும் குற்றங்களும் ஏற்றம் கண்டுள்ளன; 6.8 விழுக்காடு உயர்ந்து அத்தகைய 157 சம்பவங்கள் பதிவாகின.
எனினும் கொலைக் குற்றங்களும் சுடும் ஆயுதமேந்தி கொள்ளையிடும் சம்பவங்களும் முறையே 55.6 விழுக்காடும் 60 விழுக்காடுமாக சரிந்துள்ளன.
மோட்டார் சைக்கிள் திருட்டும் 128 சம்பவங்களிலிருந்து 68-டாக கணிசமாகக் குறைந்துள்ளது.
வீட்டை உடைத்துத் திருடும் சம்பவங்கள் 41.7 விழுக்காடு அதிகரித்த வேளை, மோட்டார் வாகனத் திருட்டும் அதிகரித்திருப்பதாக யூசோஃப் சொன்னார்.