யுனிடென் (UNITEN) பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன், பங்சார் TNB தலைமை அலுவலக இந்திய ஊழியர்களும் யுனிடென் ஆய்வகமும் (UNITEN RESEARCH) இணைந்து இரண்டாவது முறையாக இலவசமாக எஸ்.பி.எம் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தனர். மலாய் மொழி , ஆங்கில மொழி, வரலாறு மற்றும் கணித பாடங்களின் இறுதி கட்ட தேர்வுக்கான ஆயத்த நடவடிக்கை தொடர்பாக அனுபவமிக்க ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். B பிரிவைச் சேர்ந்த சுமார் 130 மாணவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்த நிகழ்வுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் ஏற்பாட்டு குழுவினர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.