Latestமலேசியா

சுபாங் ஜெயாவில், கார்நிறுத்துமிடத்தில் சிறுநீர் கழித்த ஆடவரின் அருவருக்கத்தக்க செயல்; இணையவாசிகள் கண்டனம்

கோலாலம்பூர், நவ 18 – சிலாங்கூர், சுபாங் ஜெயாவிலுள்ள, பேரங்காடி ஒன்றின்,அடித்தள கார் நிறுத்துமிடத்தில், ஆடவர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.

தமது அந்த செயலை நபர் ஒருவர் பதிவுச் செய்கிறார் என தெரிந்தும், அந்நபர் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், சிறுநீர் கழிக்கும் காட்சி அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.

அதோடு, மன்னிப்புக் கோராமல், தனது மஸ்டா ரக காரில் ஏறி கையசைத்து விட்டு அலட்சியமாக அந்த ஆடவர் அங்கிருந்து வெளியேறுகிறார்.

அச்சம்பவம் இம்மாதம் 16-ஆம் தேதி, இரவு மணி 10.51 வாக்கில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

தெரு பூனையை போல கண்ட இடத்தில் சிறுநீர் கழிக்கும் அந்த ஆடவரின் செயல் குறித்து, சமூக ஊடக பயனர்கள் பலர் அருவருப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!