Latestஇந்தியா

தெலுங்கானாவில் நல்லி எலும்பு கறியால் நின்றுபோனது திருமணம்

தெலுங்கானா, டிச 27 – தெலுங்கானா மாநிலம் நிஜாமுதீன் சேர்ந்த பெண் ஒருவருக்கும், ஜக்தியாலை சேர்ந்த ஆண் ஒருவருக்கும் கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், மணமகளின் வீட்டார், அவர்களது சொந்தங்களுக்கும், மணமகனின் வீட்டாருக்கும் அசைவ விருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

விருந்தில், நல்லி எலும்பு பரிமாறப்படவில்லை என்பதால், இரு வீட்டாருக்குமிடையே வாக்குவாதம் வெடித்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கூறி மணமகன் வீட்டார் திருமணத்தையே நிறுத்திவிட்டனர்.

விருந்தில் நல்லி எலும்பு கறி இல்லாதது தங்களை அவமதிக்கும் செயலாக உள்ளது என மாப்பிள்ளை வீட்டார் கூறியுள்ளனர்.

வாக்குவாதம் பெரிதாகவே, தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப்படுத்த முயற்சி செய்தும், திருமணத்தை நிறுத்தும் முடிவிலிருந்து மணமகன் வீட்டார் மாறவில்லை.

நல்லி எலும்பால் திருமணம் நின்று போனது இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!