சிங்கப்பூரில் இரு ஆண் மாணவர்களை மானபங்கம் படுத்திய ஆண் சீன ஆசிரியருக்கு 53 மாதங்கள் சிறை
சிங்கப்பூர், நவ 4 – சிங்கப்பூரில் 2014லிருந்து 2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தன்னிடம் கூடுதல் வகுப்பு படித்த இரு ஆண் மாணவர்களை மானபங்கம் செய்த குற்றத்திற்காக 57 வயது சீன ஆண் ஆசிரியருக்கு 53 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அச்சமயத்தில் அவ்விரு மாணவர்களுக்கும் வயது 11 மற்றும் 10லிருந்து 12 வயதாகும்.
இதே ஆடவன் 2006ஆம் ஆண்டு இது போன்ற குற்றத்திற்காக 10 மாதங்கள் சிறை தண்டணை அனுபவித்தவர் என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
முதல் சிறுவன் தம்மை 20 முறை அந்த ஆசிரியர் பானபங்கம் செய்யப்பட்ட பின்னர் தொல்லை தாங்காமல் தாயிடம் கூற அச்சம்பவம் அம்பலமானதோடு தாய் புகாரும் செய்துள்ளார்.
இரண்டாம் மாணவர் ஆசிரியர் பாலியல் தொல்லை செய்கின்றார் என்பது அறியாமல் முதலில் இருந்துள்ளார். அதே சமயத்தில் பயம் காரணமாகவும் யாரிடமும் சொல்லாமல் சில காலம் கழித்து சொல்லவே அச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.