
கோத்தா பாரு, ஜூன்- 4 – சமூக ஊடகத்தில் அறிமுகமான ஆடவரை நேரில் காண்பதற்காக தோழியுடன் 500 கிலோ மீட்டர் தூரம் பயணித்த பதின்ம வயது பெண், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
14 வயதான இருவரும், 30 வயது அவ்வாடவனைப் பார்ப்பதற்காக பெற்றோருக்குத் தெரியாமல் கிளந்தான் தும்பாட்டிலிருந்து கெடா கூலிமுக்கு புறப்பட்டுள்ளனர்.
இருவரும் சென்ற kapcai மோட்டார் சைக்கிள் பேராக், கெரிக்கில் பழுதடைந்தது; இதனால் அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி இருவரும் ஏறிக் கொண்டனர்.
காரோட்டியான சந்தேக நபர் கூலிம் சென்றடைந்ததும், அவ்விருப் பெண் பிள்ளைகளில் ஒருவரை தனியாக ஓரிடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
4 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பிய போது பெற்றோர் அதட்டி கேட்ட பிறகே உண்மை வெளிவந்தது.
பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானதை அடுத்து போலீஸில் புகார் செய்யப்பட்டது.
சந்நேக நபரும் தற்போது கெடா போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.
இது போன்ற சம்பவங்களைத் தடுக்க, பிள்ளைகளின் நடமாட்டம், சமூக ஊடகத் தொடர்பு போன்றவற்றை பெற்றோர் அணுக்கமாகக் கண்காணிக்க வேண்டுமென போலீஸ் கேட்டுக் கொண்டது.