Latestமலேசியா

கோவா கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி, 70 பேர் காயம்

பணஜி, மே-4- இந்தியாவின் கோவா மாநில கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 6 பேர் உயிரிந்தனர்.

70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அவர்களில் பலரது நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது.

தலைநகர் பணஜியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீ லைரை தேவி கோவிலில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது.

6 நாட்கள் களைக்கட்டும் பாரம்பரியமிக்க இத்திருவிழாவைக் காண்பதற்காக கோவா மட்டுமின்றி பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களிலிருந்தும் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து குவிந்திருந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு தீமிதி விழா தொடங்கிய போது, திடீரென கூட்டம் அதிகரித்தது.

தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பலர் கீழே விழுந்து ஒருவரை ஒருவர் மிதித்ததால் அவ்விடமே கலவரமானது.

அதில் 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

மின் கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியதால் கூட்டத்திலிருந்தவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு ஓட முயன்றதால், இச்சம்பவம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும் உண்மைக் காரணத்தைக் கண்டறிய மாநில அரசு உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!