Latestமலேசியா

சிறார் டிக் டொக் விவகாரம்; கல்வி அமைச்சு கலந்துரையாடல் நடத்தும்

பயான் லெபாஸ், பிப்ரவரி 5 – 13 வயதுக்கு கீழ்பட்ட சிறுவர்கள் டிக் டொக் கணக்கை வைத்திருப்பது தொடர்பில், கல்வி அமைச்சு தகவல் தொடர்பு அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தும்.

சிறார்களை உட்படுத்திய அவ்விவகாரம் தொடர்பில், எந்த ஒரு வழிகாட்டியையும் வெளியிடுவதற்கு முன், தமதமைச்சு தகவல் தொடர்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்வது அவசியம் என, கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்தார்.

சிறார்கள் மத்தியில் டிக் டொக் ஏற்படுத்தும் விளைவுகள் அல்லது தாக்கங்கள் குறித்து, முழுமையாக தெரிந்து கொள்வது அவசியம்,

அதனால், அவ்விகாரம் குறித்து, இறுதி முடிவுச் செய்யப்படும் முன், தகவல் தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சிலுடன் கலந்துரையாடல் நடத்தப்படுமென பட்லினா சொன்னார்.

முன்னதாக, 13 வயதுக்கு கீழ்பட்ட சிறுவர்களை உட்படுத்திய டிக் டொக் கணக்கு குறித்தும் அதன் நிர்வாகத்திடம் தெரிவிக்கப்படுமென, கடந்த வெள்ளிக்கிழமை பாஹ்மி கூறியிருந்தார்.

சிறுவர்கள் டிக் டொக் கணக்குகளை பயன்படுத்தும் விவகாரம் சில பிரச்சனைகளுக்கு வித்திட்டுள்ளதால், அது குறித்து ஆராயப்படுவதாகவும் பாஹ்மி குறிப்பிட்டிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!