Latestமலேசியா

கிள்ளானில் 31 வயது ஆடவரின் சடலம் மீட்பு: போலீஸ் கொலை விசாரணை

கிள்ளான், ஜனவரி-20-வட கிள்ளானில் இன்று காலை ஓர் ஆடவரின் உயிரற்ற சடலம் மீட்கப்பட்டது.

7.26 மணி அளவில் பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தைக் கைப்பற்றியது.

உயிரிழந்தவர் 31 வயது மலேசியர் என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர் 3 குற்றச்சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர் என்றும் போலீஸ் கூறியது.

2 வழக்குகள் குற்றவியல் சட்டத்தின் கீழும் ஒரு வழக்கு அபாயகர வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுத சட்டத்தின் கீழும் விசாரிக்கப்படுகிறது.

மரணத்தை கொலை என வகைப்படுத்தி போலீஸ் தீவிர விசாரணை நடத்துகிறது.

தகவல் தெரிந்தோர் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!