Latestமலேசியா

கால தாமதமான கட்டொழுங்கு நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஆசிரியைக்கு வெற்றி

கோலாலம்பூர், ஜூன்-11 – ஏழாண்டுகள் தாமதமாக தம் மீது கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து, பேராக்கில் சட்டப் போராட்டம் நடத்திய ஆசிரியை அதில் வெற்றிப் பெற்றுள்ளார்.

36 வயது Farah Masyitah Nordin, 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் இரு முறை கரு கலைந்துபோனதால் மனதளவில் உருக்குலைந்துபோனார்.

தவிர பணப் பிரச்னை, குடும்பப் பிரச்னை வேறு…

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட அந்த பேராக், சுல்தான் அஸ்லான் ஷா தேசிய இடைநிலைப்பள்ளி ஆசிரியை, 2015 ஜனவரி முதல் 2016 ஆகஸ்ட் வரை 514 நாட்களுக்கு பள்ளிக்கு மட்டம் போட நேர்ந்தது.

எனினும் அதிலிருந்து ஒருவழியாக மீண்டு அவர் பணிக்குத் திரும்பினார்.

என்றாலும் பதட்டம், பயம் மற்றும் நம்பிக்கையின்மை அவரை வாட்டியது.

இருந்த போதிலும் விடாமுயற்சியின் காரணமாக அவரின் வேலைத்தரம் மேம்பட்டு, 2022-ஆம் ஆண்டில் APC எனப்படும் நற்சேவைக்கான விருதை வென்றார்.

இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றையும் அனுபவித்தவருக்கு, 2023-ல் காரணம் கோரும் கடிதம் அனுப்பட்டது.

அதாவது ஏழாண்டுகளுக்கு முன்னர் பள்ளிக்கு நீண்ட காலம் ‘மட்டம் போட்டதற்காக’…

அதற்கு அவர் உரிய பதிலை வழங்கிய நிலையில், 2023 அக்டோபரில் வேலையிலிருந்தே நீக்கப்பட்டார்.

ஏழாண்டுகள் கழித்து கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது நியாயமற்றது, நடைமுறைப்படி தவறானது, இயற்கை நீதிக்கு எதிரானது எனக் கூறி Farah வழக்குத் தொடுத்தார்.

வழக்கை விசாரித்த ஈப்போ நீதிமன்றமும், அவரின் வாதங்களை ஏற்றுக் கொண்டு அவரின் பதவி நீக்கம் செல்லாது என தீர்ப்பளித்தது.

ஏழாண்டுகள் வரையா கட்டொழுங்கு விசாரணையை இழுத்தடிப்பீர்கள் என நீதிபதி கேள்வி கேட்டார்.

அதோடு செலவுத் தொகையாக Farah-வுக்கு 20,000 ரிங்கிட்டை வழங்குமாறு, பிரதிவாதிகளான பேராக் கல்வி இலாகா, கல்வி அமைச்சு மற்றும் அரசாங்கத்திற்கு அவர் உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!