
ஜோகூர் பாரு, செப்டம்பர் -10 – ஜோகூர் பாருவில் 3 வாகனங்களை உட்படுத்திய விபத்தில், முதியவர் ஓட்டிச் சென்ற Toyota Vios கார், பெரியக் கால்வாயில் விழுந்தது.
Jalan Persisiran Perling 1 மற்றும் Jalan Simpang Taman Perling சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நேற்று பிற்பகலில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
எனினும் 68 வயது காரோட்டிக்கு அதில் காயமேதும் ஏற்படவில்லை.
சம்பவத்தின் போது உள்ளூர் ஆடவர் ஓட்டிச் சென்ற டேக்சி திடீரென நடுப்பாதையிலிருந்து வலப்பக்கம் திரும்பியிருக்கிறது.
டேக்சியை மோதுவதைத் தவிர்க்க முயன்ற Vios, Myvi-யை மோதி கால்வாயில் விழுந்தது போலீசின் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
நீல நிற Vios கார் கால்வாயில் விழுந்து கிடப்பதும், அதன் ஓட்டுநரை பொது மக்கள் வெளியில் இழுக்க உதவுவதும் முன்னதாக வைரலான புகைப்படத்தில் தெரிந்தது.