Latestமலேசியா

குப்பை வீசுபவர் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது – அமைச்சர் Nga Kor Ming

பெட்டாலிங் ஜெயா: நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள கடுமையான குப்பை வீசல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ், வெளிநாட்டவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் தண்டனை விதிக்கப்படும் என்று வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் Nga Kor Ming தெரிவித்தார்.

சட்டத்தை அமல்படுத்த, நாடு முழுவதும் SWCorp-இன் 330 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் புக்கிட் பிந்தாங் பகுதியில் 42 பேர் பிடிபட்டனர். இதில் 18 வெளிநாட்டவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குவர். தவறு செய்யும் குழந்தைகளுக்கான அபராதத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலர்களே செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சமூக சேவை தண்டனை முறை ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பஹாங், பெர்லிஸ், கெடா, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய இடங்களில் அமலில் உள்ளது. சட்டத்தை மீறுவோர் 12 மணி நேரம் வரை சமூக சேவை செய்ய உத்தரவிடப்படலாம் அல்லது 2,000 ரிங்கிட் முதல் 10,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும்.

இன்னும் சட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்களுக்கு, நடைமுறைப்படுத்த ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!