
கோலாலம்பூர், மே-6, கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் பெயரில்லாமல் விபச்சார விடுதியாக செயல்பட்டு வந்த மையங்களிலிருந்து 16 வெளிநாட்டவர்கள் கைதாகியுள்ளனர்.
பொது மக்கள் கொடுத்த தகவல் மற்றும் 2 வாரங்களாக உளவுப் பார்த்ததன் அடிப்படையில், நேற்று முன்தினம் பாண்டான் பெர்டானா, ஸ்ரீ கெம்பாங்கான் ஆகிய இடங்களில் குடிநுழைவுத் துறை சோதனையில் இறங்கியது.
கைதானவர்களில் இருவர் விபச்சார விடுதிகளைப் பராமரித்து வந்த உள்ளூர் ஆடவர்கள் ஆவர்.
ஏனைய 14 வெளிநாட்டவர்களில் 2 ஆடவர்கள் உட்பட 9 பேர் வியட்நாமியர்கள், நால்வர் இந்தோனேசியப் பெண்கள், ஒருவர் லாவோஸ் பெண் என அதிகாரிகள் கூறினர்.
சமூக ஊடகங்கள் வாயிலாக விலைமாதர்களின் சேவை விளம்பரம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ‘சேவைக்கும்’ 250 ரிங்கிட் முதல் 1,200 வரையில் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.
பணத்தை ரொக்கமாகவோ அல்லது இணையப் பரிவர்த்தனையாகவோ செலுத்தும் வசதியும் உண்டு.
அலர்களில் பலருக்கு முறையான பயணப் பத்திரங்கள் இல்லை; சிலர் சுற்றுலா விசாவில் வந்து, நீண்ட காலமாகத் தங்கியிருப்பதும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
மேற்கொண்டு விசாரிப்பதற்காக அவர்கள் புத்ராஜெயா குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்