Latest
சுங்கை பட்டாணியில் ஆனந்தபவன் உணவகத்தில் தீ விபத்து

சுங்கை பட்டாணியில் அனைவராலும் அறியப்பட்ட ஆனந்தபவன் உணவகத்தில் இன்று காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. முன்பக்கத்தில் செயல்படும் சமையலறையில் எரிவாயு சிலிண்டரால் ஏற்பட்ட தீயில் உணவகத்தின் சிறுபகுதி மட்டுமே சேதாரமான நிலையில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில், நாளை ஏப்ரல் 18 முதல் உண்வகம் வழக்கம்போல் செயல்படும் என அந்த உணவகத்தின் உரிமையாளர் டத்தோ ஹரிகிருஸ்ணன் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்துள்ளார்